பிரபல நடிகருக்கு கொரோனா... வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டார்... ஜுரம், இருமல் எதுவும் இல்லை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க மே 31-ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான்.

பிரபல நடிகருக்கு கொரோனா வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டார்Popular actor to be diagnosed with corona positive

இந்நிலையில் பிரபல நடிகர் கிரண் குமார் தற்போது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஹிந்தியில், போஜ்பூரி, குஜராத்தியில் பல படங்களில் நடித்தவர். 74 வயதாகும் அவர் தற்போது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறும்போது "எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. மே 14 அன்று மருத்துவமனைக்கு சென்றேன். கட்டாயமாக்கப்பட்ட பரிசோதனையை மேற்கொண்ட போது எனக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் எனக்கு ஜுரம், இருமல் எதுவும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன்" என்று கூறியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் நல்லபடியாக மீண்டு வர ரசிகர்கள் அவருக்கு தைரியம் தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகருக்கு கொரோனா வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டார்Popular actor to be diagnosed with corona positive

People looking for online information on Corona, Covid19, Kiran Kumar will find this news story useful.