பிரபல நடிகர் மற்றும் MLA தனிமைப்படுத்தப்பட்டனர்... கைதிக்கு கொரோனா... விழாவால் வந்த அதிர்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள காமெடி நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் வாமனபுரம் எம்.எல்.ஏ, டி.கே.முரளி இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.  இந்த செய்தி மலையாள சினிமாவில் காட்டு தீ போல பரவி வருகிறது. சிறைக்கைதிக்கு கொரோனா இருந்ததால் இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி காரணமும் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் மற்றும் MLA தனிமைப்படுத்தப்பட்டனர் Popular Actor and MLA quarantined after prisoner test positive for Corona ft Suraj Venjaramoodu

40 வயதாகும் நபர் ஒருவர் குடிபோதை காரணமாக போலீஸில் சிக்கி காவலில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும்  சர்க்கிள் இன்ஸ்பெக்டர்(CI) ஒருவர் நடிகர் சூரஜின் மரவள்ளி கிழங்கு தோட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவை MLA முரளி துவங்கி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அந்த சிறைக்கைதிக்கு கொரோனா இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 34 போலீஸ் ஆபீஸர்கள் மற்றும் 14 கைதிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நடிகர் சூரஜ் மற்றும் MLA இருவரையும் கூட  தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளனர். இந்த செய்தி நடிகர் சூரஜை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகர் மற்றும் MLA தனிமைப்படுத்தப்பட்டனர் Popular Actor and MLA quarantined after prisoner test positive for Corona ft Suraj Venjaramoodu

People looking for online information on Corona, Covid19, Suraj Venjaramoodu will find this news story useful.