பிரபல நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைப்பா?... பக்கத்து வீட்டுக்காரருக்கு கொரோனா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கொரோனாவால் நடிகையின் குடியிருப்புக்கு சீல் Popular actress apartment got sealed due to corona virus

அதனடிப்படையில் இந்தி நடிகை மலைக்காவின் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர் என்ற செய்தி பரவி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'உயிரே' படத்தில் 'தையா தையா' பாட்டுக்கு நடனமாடியிருப்பவர் தான் நடிகை மலைக்கா. இந்தியில் பல படங்களில் நடித்திருப்பவர் சல்மான் கான் நடித்த தபாங் படங்களை தயாரித்தார். இவர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை தனிமைப்படுத்தி போலீசார் சீல் வைத்து விட்டனர் என்று பல வடநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் "நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைக்கவில்லை. மாறாக குடியிருப்பு முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் தான் செய்துள்ளனர்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனாவால் நடிகையின் குடியிருப்புக்கு சீல் Popular actress apartment got sealed due to corona virus

People looking for online information on Corona, Lockdown, Malaika will find this news story useful.