பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விட்டாரா குமரன்?... வைரல் செய்தி..உண்மை என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்நிலையில் அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார்.

pandiyan stores kumaran post goes viral சீரியலில் இருந்து விலகி விட்டாரா குமரன்?

இந்த சீரியலில் கதிர் முல்லை கதாபாத்திரத்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சில தினங்களாக கதிர் வெளியூருக்கு சென்று இருப்பது போன்று அவர் இல்லாத காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது. இதை பார்த்த பலரும் "கதிர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பட வாய்ப்புகள் வந்ததால் இந்த முடிவு எடுத்துள்ளார்" என்று செய்திகள் வெளியிட்டு வந்தனர். சித்ரா மறைந்த பிறகு குமரனும் இப்படி விலகி விட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் குமரன் தற்போது ஒரு பதிவிட்டு உள்ளார். அதில் "நான் என் வேலைக்கு திரும்பிவிட்டேன்" என்று கூறி பாண்டியன் ஸ்டோர் சம்பந்தமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விட்டாரா குமரன்?... வைரல் செய்தி..உண்மை என்ன..? வீடியோ

மேலும் செய்திகள்

pandiyan stores kumaran post goes viral சீரியலில் இருந்து விலகி விட்டாரா குமரன்?

People looking for online information on Pandiyan Stores will find this news story useful.