www.garudabazaar.com
iTechUS

வெளியேறும் முன்பு, விக்ரமனுக்காக அம்பேத்கரின் பொன்மொழியை பேசி Bigg Boss நெகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த 6 ஆவது பிக் பாஸ் சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

Bigg Boss last words to vikraman before exit from house

                                                     Image Credit : vijay television

Also Read | "விக்ரமன் கூட சண்டையா?"... Finale வில் விடை சொன்ன ADK.. மனம் நெகிழ வைத்த வீடியோ!!

21 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் மிக மிக விறுவிறுப்பாக சென்றதுடன் மட்டுமில்லாமல், யார் இறுதி வரை முன்னேறுவர் என்ற எதிர்பார்ப்பும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்து கொண்டே இருந்தது. அனைவரும் சிறந்த போட்டியளராக வளம் வந்த காரணத்தினால் ஒவ்வொரு எபிசோடும் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு தான் இருந்தது.

Bigg Boss last words to vikraman before exit from house

அப்படி இருக்கையில், அசிம், விக்ரமன், ஷிவின், கதிரவன், அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் Finale வாரத்திற்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். இதில் மூன்று லட்ச ரூபாய் பண மூட்டை எடுத்துக்கொண்டு கதிரவன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற, அதற்கடுத்ததாக அமுதவாணனும் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனிடையே மைனா நந்தினியும் பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆக Finale-விற்கு விக்ரமன், ஷிவின் மற்றும் அசிம் ஆகிய மூன்று பேரும் தகுதி பெற்றிருந்தனர்.

Bigg Boss last words to vikraman before exit from house

இந்த நிலையில், சமீபத்தில் முடிந்துள்ள பிக் பாஸ் Finale வில் அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, 2 ஆவது இடத்தை விக்ரமனும், 3 ஆவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக 3 பேரும் லிஃப்ட் மூலம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள் 3 பேரிடமும் தனித்தனியாக நெகிழ்ச்சியான விஷயங்களை பேசி இருந்தார் பிக் பாஸ்.

அந்த சமயத்தில் விக்ரமனிடம் பேசிய பிக் பாஸ், "அரசியலை விட்டு ஓடும் எத்தனையோ இளைய சமுதாயத்தினருக்கு நீங்கள் ஒரு சிறந்த முன்னுதாரணம். கரடு, முரடான முட்கள் நிறைந்த பாதையில், நீங்கள் ஒரு வெற்றி வீரனாய் வலம் வருவீர்கள் என்ற நம்பிக்கை  எனக்கு உண்டு. நமக்கு ஏன் பிரச்சனை என பலர் ஒதுங்கி நிற்கும் ஒரு துறையில், தன்மையோடு, கொள்கையோடு களமிறங்கும் ஒரு வீரன் நீ.

Bigg Boss last words to vikraman before exit from house

அரசியல் பழகு என உரக்கச் சொன்னது நாளை ஒரு நல்ல மாற்றத்தை ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. "யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற வள்ளுவன் குரளுக்கேற்ப இந்த வீட்டில் வாழ்ந்து காட்டியதற்கு வாழ்த்துக்கள். கற்பி, ஒன்றுசேர், போராடு சகோ" என மிகவும் நெகிழ்ந்து போய் தனது கருத்துக்களை பிக் பாஸ் வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read | “அறம் வெல்லும்” - வெளியேறிய விக்ரமன்.. அம்பேத்கர் படத்தை வணங்கி நெகிழ்ச்சி.. bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss last words to vikraman before exit from house

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss 6 Tamil Finale, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.