RUSSIA – UKRAINE CRISIS : 800 இந்திய மாணவர்களை மீட்ட பெண் விமானி.. யார் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Mar 14, 2022 05:58 PM

உக்ரைனில் இருந்து போர் காரணமாக வெளியேறிய மாணவர்களில் 800 பேரை இந்தியாவிற்கு அழைத்து வந்த பெண் விமானியான மகாஸ்வேதா சக்கரவர்த்திக்கு சமூக வலைத் தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Mahasweta Chakraborty a pilot who evacuated over 800 students

"GPay-னு சொல்லி ஏமாத்துவாங்க.. குடிச்சிட்டு வந்து TEA Can-அ உதைப்பாங்க".. Midnight Tea வியாபாரிகளின் சோகம்.. வீடியோ..!

போர்

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நாள்தோறும் மோசமடைந்து வருகிறது. இந்தப் போரினால் சுமார் 15 லட்சம் உக்ரைனிய மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதேபோல, உக்ரைனில் இருந்த இந்திய மாணவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்தது.

இதனை அடுத்து போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ரோமானியா உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் இடம் பெயர்ந்தனர். இவர்களை மீட்க இந்திய அரசு 'ஆப்பரேஷன் கங்கா' என்னும் மீட்பு திட்டத்தை துவங்கியது.

Mahasweta Chakraborty a pilot who evacuated over 800 students from Ukr

மீட்பு நடவடிக்கை

இதுவரையில் இந்த சிறப்பு மீட்புத் திட்டத்தின் கீழ் 75 விமானங்களை இந்திய அரசு இயக்கியுள்ளது. இதன்மூலம் உக்ரைனில் சிக்கிக்கொண்ட சுமார் 14,000 இந்தியர்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணியில் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுள் இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருபவர் தான் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மகாஸ்வேதா, மேற்கு வங்க மாநில பாஜக மகளிரணி தலைவர் தனுஜா சக்கரவர்த்தியின் மகளாவார்.

Mahasweta Chakraborty a pilot who evacuated over 800 students from Ukr

கடந்த நான்கு வருடங்களாக இண்டிகோ நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வரும் மகாஸ்வேதா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதிவரையில் மொத்தம் 6 முறை மீட்பு விமானங்களை இயக்கி இருக்கிறார். இவற்றுள் போலந்தில் இருந்து நான்கு முறையும் ஹங்கேரியில் இருந்து இரண்டு முறையும் இந்தியாவிற்கு விமானங்களை செலுத்தி இருக்கிறார்.

பெருமை

இதுபற்றி பேசிய மகாஸ்வேதா," இது ஒரு வாழ்நாள் அனுபவமாகும். இளம் மாணவர்கள் அதிர்ச்சியுடனும் சிலர் நோய்வாய்ப்பட்டும் இருந்தனர். ஆனால், அவர்களின் மன உறுதிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக பெருமையடைகிறேன்" என்றார்.

உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து 800 இந்திய மாணவர்களை மீட்ட மகாஸ்வேதா கொரோனா காலத்தில் இந்திய அரசு அறிவித்த சிறப்பு விமான போக்குவரத்து சேவையான 'வந்தே பாரத்' திட்டத்திலும் பணிபுரிந்து இருக்கிறார்.

Mahasweta Chakraborty a pilot who evacuated over 800 students from Ukr

மீட்புப் பணியில் ஈடுபடுவது குறித்து பேசிய மகாஸ்வேதா,"சமூகத்திற்கு என்னால் செய்ய முடிந்த பங்களிப்பினை அளிக்க முடிவதை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் பசி, தாகம், மரண அச்சுறுத்தல்கள், தீவிர வானிலை மற்றும் தொழில் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுடன் போராடிய இந்த இளம் மாணவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களின் சூழ்நிலையில் நான் இருந்திருந்தால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது" என்றார்.

உக்ரைனின் அண்டை நாடுகளில் சிக்கி இருந்த 800 மாணவர்களை மீட்ட விமானியான மகாஸ்வேதாவை அனைவரும் சமூக வலைத் தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

"8 கோடி பேர் யூஸ் பண்றாங்க.. ரஷ்யா எடுத்த முடிவு அதிர்ச்சியா இருக்கு".. இன்ஸ்டாகிராம் தலைவர் சொன்ன தகவல்..!

Tags : #PILOT #STUDENTS #UKRAINE #RUSSIA #RUSSIA UKRAINE CRISIS #இந்திய மாணவர்கள் #ரஷ்யா உக்ரைன் போர் #பெண் விமானி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mahasweta Chakraborty a pilot who evacuated over 800 students | World News.