“இலங்கை அரசு தோக்கடிச்சிருச்சு.. உலகம் முழுவதும் புலிகள் ஆக்டிவா இருக்காங்க!!” - ‘இங்கிலாந்து அரசை’ வலியுறுத்தி மகிந்த ராஜபக்சே போட்ட ட்வீட்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 22, 2020 09:05 PM

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இங்கிலாந்தில் தொடர வேண்டும் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

LTTE terrorism remain very active around the world, Mahinda Rajapaksa

அண்மையில், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையில், நியாயமில்லை எனக் கூறியதுடன்,  அந்நாட்டு நீதிமன்றம், இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்தின் மீதான தடை ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த தனது ட்வீட்டில்,  “விடுதலைப் புலிகளை, இலங்கை தோற்கடித்ததுடன், அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டது.

ஆனால், விடுதலைப்புலிகள் எனும் தீவிரவாத இயக்கத்தின் எச்சங்கள் உலகம் முழுவதும் மிகவும் ஆக்டிவாகவே செயல்பட்டு வருகின்றனர். அத்துடன் எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடரும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. LTTE terrorism remain very active around the world, Mahinda Rajapaksa | World News.