“பாகிஸ்தானுடன் இணைந்து பயோ வார்?”.. ‘இந்தியா மற்றும் மேற்கு நாடுகள்தான் டார்கெட்டா?’.. கொரோனாவை மிஞ்சும் அடுத்த கட்ட நகர்வு?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் விவகாரத்தில் தொடங்கி, பல்வேறு விஷயங்களால் அமெரிக்க - சீனா மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீனா தற்போது தனக்கு ஆதரவான ரஷியா, தென் கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நட்பாக இருக்கிறது. இந்தியா மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்காக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானும் சீனாவும் மூன்றாண்டு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![China Pakistan covert deal biowar against india, west countries China Pakistan covert deal biowar against india, west countries](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/china-pakistan-covert-deal-biowar-against-india-west-countries-1.jpg)
உலக நாடுகளுக்கு சீனா கொடுத்துவரும் பிரச்சினைகளை சமாளிக்க, சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்று சேர்ந்துள்ளன. குறிப்பாக இந்த நாடுகள், உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் நிறுவனங்களை ஒதுக்கி, பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, மோனோபோலி என்று சீனாவின் நிறுவனங்கள் தனித்து இயக்குவதை எதிர்ப்பது உள்ளிட்ட விஷயங்களை கடைபிடிக்க முடிவு செய்துள்ளன.
மேலும், சீனா தென் சீன கடல் எல்லை, தைவான் ஆகிய நாடுகள் மீது அத்துமீறி வருவதைத் தடுக்கவும், ஹாங்காங் பிரச்சினையில் சீனாவின் செயலை எதிர்க்கவும் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போது சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் தயாராகியுள்ளது. தற்போது இந்தியா மற்றும் மேற்கு போட்டி நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்காக பாகிஸ்தானும் சீனாவும் ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை (bio-warfare) விரிவுபடுத்தும் மூன்று ஆண்டு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஆபத்தான ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல ஆராய்ச்சி திட்டங்களும் அடங்கும் என தி கிளாக்சன் செய்தி நிறுவனம் பல உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. முன்னதாக உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியிலிருந்து கொரோனா நோய் தோன்றியிருக்கலாம் என்றும் டி.என்.ஏ ஆராய்ச்சியில் சீனா பெரிதும் ஈடுபட்டுள்ளதாகவும், இது ஒரு உயிரியல் ஆயுதத்தை குறிவைக்க அல்லது குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த அபாயகரமான உயிரி வேதியியல் ஆராய்ச்சிக்கான ஒரு இடமாக பாகிஸ்தானை, சீனா தேர்ந்தெடுத்திருப்பதாகவும், இதுபோன்ற செயல்களுக்கு தனது சொந்த நிலப்பகுதியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகவும் தெரிகிறது. சீனா-பாகிஸ்தான் உயிரியல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் வைரஸ் (சி.சி.எச்.எஃப்.வி) மீதான சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக, உளவு வட்டாரங்கள் தெரிவித்தன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)