அடேங்கப்பா..! 400 வருசத்துக்கு அப்புறம் லண்டனுக்கு கொண்டுவரப்பட்ட 2 நீர்நாய்கள்.. இதுக்கு பின்னடி இப்படியொரு காரணம் இருக்கா..?
முகப்பு > செய்திகள் > உலகம்400 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு நீர்நாய்கள் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நீர்நாய்கள், தோல் மற்றும் மாமிசத்துக்காக தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தன. அதனால் 16-ம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்தில் நீர்நாய்கள் இல்லாமல் போயின. இந்த நிலையில் 400 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனுக்கு 2 நீர் நாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை என்பீல்டு பகுதியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இரண்டு வயது கொண்ட ஆண் மற்றும் பெண் நீர்நாய்கள் இனப்பெருக்கம் ஏற்பட்டதும் அவற்றை நீர்நிலைகளில் விட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்நாய்கள், நீர்நிலைகளின் கரைகளில் மண்ணால் நிரப்பி மரங்களின் வேர்களை காக்கும். அதனால் வெள்ள அபாயம் தவிர்க்கப்படுகிறது. இதனால்தான் நீர நாய்கள் இலண்டனுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாக உயிரின ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
