தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று!.. சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!. முழு விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 29, 2020 07:23 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn covid19 updates and statistics as on apr 29 press release

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  1,210 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 768 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 1,01,075 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.