இறுதிகட்ட பரபரப்புரையில்... திடீரென பேச முடியாமல் தவித்த முதலமைச்சர்... உணர்ச்சிவசப்பட்டு கத்திய மக்கள் கூட்டம்! - என்ன நடந்தது??

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 04, 2021 07:07 PM

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 6) நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

tn cm palaniswami feels emotional in last election campaign

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், இறுதி பிரச்சாரத்தின் போது, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, 'பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக, தனிநபர் தாக்குதல் என்ற பெயரில் என்னை அவமானப்படுத்தி வந்தனர். அது மட்டுமில்லாமல், தொடர்ந்து பெண்களை அவமானப்படுத்தி வரும் கட்சி என்றால் அது திமுக தான். திமுக ஆட்சியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இருந்ததில்லை. மக்களுக்கு சிறந்த ஆட்சி வழங்குவதாக கூறி, ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து ஆகியவற்றை கட்டவிழ்த்த கட்சியும் திமுக தான்.

tn cm palaniswami feels emotional in last election campaign

தங்களது பிரச்சாரத்தின் போது எனது தாயைக் கூட திமுகவினர் பழித்துப் பேசினர்.  ஒட்டுமொத்த தாய்க் குலத்தையே அவுமானப்படுத்துவது போன்ற பேச்சை திமுக மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின், கட்சியில் உள்ளவர்களின் செயல்களைக் கண்டித்து எதுவுமே பேசவில்லை.

tn cm palaniswami feels emotional in last election campaign

இப்படிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியில் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க முடியும்?. ஆனால், அதிமுக அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமில்லாமல், பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது' என முதல்வர் குறிப்பிட்டார். இதில், பெண்களுக்கு எதிரான திமுகவின் பேச்சு பற்றி பேசிய போது முதல்வர் பழனிசாமி சற்று  உணர்ச்சிவசப்பட்டார்.

tn cm palaniswami feels emotional in last election campaign

 

தொடர்ந்து பேசிய முதல்வர், 'திமுக கட்சி, இந்துக்களையும், அவர்களின் நம்பிக்கையும் நிந்தனை செய்து வருகிறது. ஆனால், அதிமுகவுக்கு இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தினரும் ஒன்று தான். சிறுபான்மையினர் நலன் காக்கும் ஒரே அரசும் அதிமுக தான். திறமையான நிர்வாகத்திற்கான முதல் பரிசையும் வென்ற அரசு அதிமுக அரசு.

tn cm palaniswami feels emotional in last election campaign

 

அதிமுகவை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் அம்மா ஆட்சி மலரச் செய்து, புதிய வரலாறு படைப்போம். மக்கள் விரோத திமுக கட்சியை தோல்வியுறச் செய்வோம்' என அதிரடி கருத்துக்களை முதல்வர் பழனிசாமி தனது இறுதி பிரச்சாரத்தின் போது பேசினார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn cm palaniswami feels emotional in last election campaign | Tamil Nadu News.