"எல்லா செலவையும் நாங்க பார்த்துக்குறோம்!"... திடீரென மூடப்பட்ட தமிழ் பள்ளிக்கூடம்!... குஜராத் அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Sep 24, 2020 06:47 PM

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி, அம்மாநில முதலமைச்சருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

tn cm edappadipalanisamy gujarat cm vijayrupani school reopening

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வந்த தமிழ் வழி மேல்நிலைப்பள்ளியை, திடீரென அம்மாநில அரசு மூடியது. மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அப்பள்ளி மூடப்பட்டதாக குஜராத் அரசு விளக்கமளித்தது.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், "குஜராத் அரசின் முடிவால் தமிழ் மாணவர்கள் கல்வியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு தமிழ் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அப்பள்ளிக்கான பராமரிப்பு செலவுகளை ஏற்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும்" முதல்வர் பழனிசாமி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn cm edappadipalanisamy gujarat cm vijayrupani school reopening | Tamil Nadu News.