'தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம்'... 'புதிய எஸ்.பி நியமனம்'... தமிழக அரசு உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 30, 2020 12:59 PM

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

Thoothukudi district SP Arun Balagopalan removed from his position

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் மாற்றப்பட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டனர். இந்தச்சூழ்நிலையில் தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தென் மண்டல ஐ.ஐி சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெறுவதால் புதிய ஐ.ஜி.யாக எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஐி,யாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முருகன் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி' யாக இருந்து வந்தவர். இதனிடையே தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thoothukudi district SP Arun Balagopalan removed from his position | Tamil Nadu News.