இன்னும் 3 நாளுல கல்யாணம்.. 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 09, 2023 02:12 PM

திருவாரூர் மாவட்டத்தின் கொரடாச்சேரியை அடுத்துள்ள மேப்பலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் பெயர் நரேஷ் குமார்.

TamilNadu Woman found dead in house before marriage

Images are subject to © copyright to their respective owners

பி. காம் பட்டதாரியான நரேஷ், திருவாரூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

நரேஷ் குமாரும் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் சுஷ்மிதாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கு மத்தியில் சுஷ்மிதா கர்ப்பம் அடையவும் செய்ததாக தகவல்கள் கூறும் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 7 மாத கர்ப்பிணியாக இருந்த சுஷ்மிதா, தனது தாய் வீட்டை விட்டு வெளியேறி நரேஷ் குமார் வீட்டிற்கும் வந்து தங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில் நரேஷ் மற்றும் சுஷ்மிதா ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் திருமணத்துக்கு மூன்று நாட்களே இருக்கும் சூழலில், சுஷ்மிதாவுக்கு நேர்ந்த துயரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமண நாள் நெருங்கி வருவதால் அதற்கு தேவையான துணிகள் உள்ளிட்ட பொருள்களையும் வாங்க நரேஷ் குமார் வெளியே செல்ல வீட்டில் சுஷ்மிதா மட்டும் தனியாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கான பொருட்களை வாங்கி வீட்டிற்கு திரும்பிய நரேஷ் குமாருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அப்போது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் சுஷ்மிதா உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு நரேஷ் குமார் அலறித் துடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். தொடர்ந்து போலீசாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் சுஷ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சுஷ்மிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் போலீசார் இதனை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் சூழலில் சுஷ்மிதாவுக்கு நேர்ந்த துயரம், அவரது குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.

Tags : #WOMAN #TIRUVARUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TamilNadu Woman found dead in house before marriage | Tamil Nadu News.