"பெத்த அம்மான்னு கூட பார்க்கல" .. தாயை கொன்று விட்டு.. வெளியே அமர்ந்தபடி மகன் செய்த பதறவைக்கும் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 15, 2023 08:48 PM

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை அடுத்த சக்கரமல்லூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் வாணிஸ்வரி. இவருடைய கணவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

Son killed his mother police arrested and enquiry

                                 Images are subject to © copyright to their respective owners.

Also Read | போனை எடுக்காத பெண்.. கதவைத் திறந்து உள்ளே போன பணிப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "ரெண்டு பேரு பக்கத்தில இப்டி ஒன்னும் இருந்திருக்கா?"

மேலும் வாணிஸ்வரிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமான சூழலில் மூத்த மகன் ராஜேஷ் காவல்துறையில் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

நிரந்தர பணிநீக்கம்..

இளைய மகன் தினேஷும் காவல்துறை பணியில் இருந்த சூழலில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பணிக்கு செல்லாத காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் தினேஷுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள சூழலில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தனது மனைவியையும் அவர் கொலை செய்ய முயற்சித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து தப்பித்த தினேஷின் மனைவி அவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

Son killed his mother police arrested and enquiry

Images are subject to © copyright to their respective owners.

தாய்க்கு நேர்ந்த துயரம்..

அப்படி இருக்கையில் தனது இரண்டாவது மகன் தினேஷுடனும் தாய் வாணிஸ்வரி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் மது குடித்துவிட்டு தனது தாயாருடனும் தினேஷ் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் சூழலில், மகனுக்கு புத்திமதி சொல்லி உள்ளார் வாணிஸ்வரி. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த தினேஷ், தனது தாயை தாக்கி கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. தனது தாய் உயிரிழந்து விட்டார் என தெரிந்ததுமே கதவை அடைத்து விட்டு வீட்டின் அருகாமையில் மது அருந்திக்கொண்டு தினேஷ் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அலறித் துடித்த மகள்..

இதற்கிடையில் தினந்தோறும் இரவு நேரத்தில் அழைக்கும் தனது தாய், இரண்டு நாட்களாக அழைக்காத காரணத்தினால் நேராக தாய் வீட்டிற்கு கிளம்பி வந்துள்ளார் வாணிஸ்வரி மகள். வீட்டுக்கு வந்த தனது சகோதரியை தினேஷ் தடுத்த சூழலில் அதனை மீறி உள்ளே சென்று பார்த்த மகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வாணிஸ்வரி உயிரிழந்து கிடந்ததை பார்த்து மகள் கதறித் துடிக்க அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கே வர, இதற்கிடையே தினேஷும் தப்பித்து சென்றுள்ளார்.

Son killed his mother police arrested and enquiry

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, தப்பித்து சென்ற தினேஷை கைது செய்து அழைத்து வந்தனர். தொடர்ந்து தினேஷிடம் நடந்த விசாரணையில் அவர் மது அருந்த தாய் பணம் தராததால் அவரை கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பெற்ற தாயை மகனே கொன்றது தொடர்பான விஷயம், அப்பகுதியில் கடும் பதட்டத்தையும் உண்டு பண்ணி உள்ளது.

Also Read | ரத்த வாந்தின்னு ஹாஸ்பிடல் போன இளைஞர்.. எக்ஸ்ரே பார்த்துட்டு அரண்டு போன டாக்டர்கள்.. "எல்லாத்தையும் பேப்பர்ல சுருட்டி சாப்பிட்டு இருக்காரு"

Tags : #MOTHER #SON #POLICE #ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Son killed his mother police arrested and enquiry | Tamil Nadu News.