35 வருஷம் கழிச்சு ரீயூனியன்.. பார்த்ததும் மலர்ந்த பழைய காதல் .. கேரள ஜோடி எடுத்த பரபரப்பு முடிவு..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 15, 2023 05:06 PM

பொதுவாக, பள்ளி அல்லது கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் நீண்ட ஆண்டுகள் கழித்து ரீயூனியன் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பார்கள்.

Kerala Reunion after 35 years old lovers meet there

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பேசாம நான் போயிடவா?" 😂.. புஜாரா பவுலிங் பார்த்து அஸ்வின் போட்ட கமெண்ட்.. பதிலுக்கு அவர் சொன்ன விஷயம் தான் அல்டிமேட்!!

அப்படி சந்திக்கும் போது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் தாங்கள் ஒன்றாக இருந்த சமயத்தில் எப்படி இருந்தார்கள் என்பது குறித்து பால்ய கால நினைவுகளை மிக சிறப்பாக நினைவுகூர்ந்து அந்த ரியூனியனை இன்னும் அழகாக்கவும் முயற்சிப்பார்கள்.

அப்படி ஒரு சூழலில் சுமார் 35 ஆண்டுகள் கழித்து நடந்த ரியூனியன் சமயத்தில் நடந்த விஷயம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

35 ஆண்டுகள் கழித்து ரியூனியன்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரியூனியனில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் 50 வயது ஒத்திருந்த சூழலில், தங்களின் பள்ளிக்கால நினைவலைகளை எண்ணி மிகவும் சிறப்பாக அந்த தருணங்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

மாயமான முன்னாள் காதல் ஜோடி..

இதனிடையே இந்த சந்திப்பின் போது பள்ளிப்பருவத்தில் காதலித்த ஒரு ஜோடி சந்தித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் பள்ளிப் பருவத்தில் காதலித்து வந்ததாகவும், பின்னர் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக வீட்டில் நிச்சயம் செய்யப்பட்டவர்களை அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் எந்த தொடர்பும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வந்த சூழலில் தற்போது 50 வயதாகும் அவர்கள் பள்ளி ரியூனியன் நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

மேலும் ஒருவருக்கொருவர் சந்தித்ததுடன் மட்டுமில்லாமல் பேசியே தருணங்களை கழித்து வந்த சூழலில், இந்த ரியூனியன் நிகழ்ச்சிக்கு வந்த அந்த காதல் ஜோடி, பின்னர் மாயம் ஆனதாகவும் கூறப்படுகிறது. வெகு நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாத காரணத்தினால், இருவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கணவரை காணவில்லை என மனைவியும், மனைவியை காணவில்லை என கணவரும் புகாரளித்துள்ள சூழலில் இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

ரியூனியன் நிகழ்ச்சியில் சந்தித்து கொண்ட முன்னாள் காதல் ஜோடி திடீரென மாயமான சம்பவம், அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | தன்னைத் தானே திருமணம் செஞ்ச பெண்.. போஸ்ட் போட்ட 24 மணி நேரத்துல எடுத்த பரபர முடிவு!!..

Tags : #KERALA #KERALA REUNION #LOVERS #MEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala Reunion after 35 years old lovers meet there | India News.