கணவரின் நடவடிக்கையால்.. விரக்தியில் இருந்த மனைவி??.. மகளின் காதலருடன் சேர்ந்து போட்ட அதிர்ச்சி திட்டம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Aug 10, 2022 11:50 PM

கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் என்எல்சி முதலாவது சுரங்கத்தில் சுகாதாரப் பிரிவில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி பெயர் சகிலா.

nlc worker wife in frustration planned with her daughter lover

இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி, அவர் ஆந்திராவில் வசித்து வருகிறார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக சண்முகம் மற்றும் சகிலா ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோபத்தில் இருந்த சண்முகம், தனியாக வீட்டுக் கதவை அடைத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், வீட்டுக்கு வெளியே நின்ற ஆம்னி வேனில் மனைவி சகிலா படுத்து தூங்கியதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், மறுநாள் காலையில் சகிலா எழுந்து பார்த்த போது, கணவர் சண்முகம் உடலில் காயங்களுடன் உயிரிழந்தது கிடந்ததை பார்த்து, அலறித் துடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால், அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து சேர்ந்த நிலையில், இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் விசாரணை மேற்கொண்டும் வந்தனர்.

சண்முகத்தின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தாலும், அந்த வீட்டின் பின்பக்க கதவை திறந்து எளிதில் உள்ளே வரவும், போகவும் முடியும் என்ற நிலை இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. எனவே, பின்பக்க கதவு பற்றி நன்கு தெரிந்த ஒருவர் தான், சண்முகத்தை கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதி உள்ளனர். அதன்படி, அவரது மனைவி சகிலாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

சண்முகத்திற்கும் வேறொரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தான் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கே தராமல் அந்த பெண்ணிற்கே அதிகம் கொடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. கணவரின் செயலால் அவர் மீது விரக்தியில் இருந்துள்ளார் சகிலா.

சகிலாவின் இரண்டாவது மகள், தமிழ் வளவன் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இவர்களது காதல் விவகாரம் சகிலாவுக்கு தெரியும் என்றாலும் சண்முகத்திற்கு இது குறித்து எதுவும் தெரியாது. இதன் பெயரில், தனது மகளின் காதலனை சேர்த்துக் கொண்ட சகிலா, கணவரை கொலை செய்யவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படியே தங்களது திட்டத்தின் பெயரில், அன்றிரவு சண்முகத்தை கொலை செய்தவர்கள், வீட்டின் பின்பக்கம் வழியாக வெளியே சென்றுள்ளனர். தொடர்ந்து, மறுநாள் காலையில் தனக்கு எதுவும் தெரியாமல், மனைவி சகிலா நாடகம் போடவே, விசாரணையில் போலீசாரிடம் சிக்கவும் செய்துள்ளார்.

Tags : #HUSBAND #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nlc worker wife in frustration planned with her daughter lover | Tamil Nadu News.