'நீச்சல் கற்கும் போது மூழ்கிய குழந்தை!.. சட்டென தண்ணீரில் குதித்த தந்தை!'... கதறித்துடித்த தாய் கண்ட காட்சியை எப்படி விவரிப்பது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jun 24, 2020 04:16 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே நீச்சல் பழகி கொடுக்க சென்ற இடத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தையும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.

krishnagiri pond dad and daughter drown during swimming

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே சிம்பலதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 45). விவசாயி. இவருக்கு புங்கம்மா(35) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். இவரது மகள் ஜெகதலா (10) பேரிகையில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பிரசாந்த் தனது மகளுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகி கொடுத்து வந்தார். நேற்றும் வழக்கம் போல் தந்தையும், மகளும் நீச்சல் பழக சென்றனர். பிரசாந்த் தொட்டியின் மேல் பகுதியில் அமர்ந்து இருந்தார். சிறுமி ஜெகதலா தொட்டியில் நீந்தி நீச்சல் பழகி கொண்டிருந்தாள். அப்போது சிறுமி திடீரென தண்ணீரில் மூழ்கினாள். மகள் தண்ணீரில் மூழ்குவதை கண்ட பிரசாந்த் அதிர்ச்சியடைந்து அவளை காப்பாற்ற தொட்டியில் குதித்தார். இதில் அவரும் தண்ணீர் தொட்டியில் மூழ்கினார்.

இதில் 2 பேரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையறிந்த பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தை, மகள் ஆகியோரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரின் உடல்களை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை-மகள் பலியான சம்பவம் சிம்பலதொட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Krishnagiri pond dad and daughter drown during swimming | Tamil Nadu News.