“20 வருஷமா பள்ளி ஆசிரியர்”.. முதல்வர் அலுவலகத்துக்கு வந்த ஒரே ஒரு புகார்!... விசாரணையில் ஆடிப்போன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 15, 2020 12:01 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.  இவர் கடந்த 1999ஆம் ஆண்டு சொக்கநாழினி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டார. அப்போது பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாகவும்,  ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் முடித்து தேர்வானதாகவும் சான்றிதழ்களை கொடுத்துள்ளார்.

Govt teacher didnt even pass SSLC, officers found after 20 yrs

தொடர்ந்து குரும்பட்டி பள்ளியில் பணியாற்றிய ராஜேந்திரன் தற்போது மிட்டல்லி புதூர் தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்  ஆசிரியர் ராஜேந்திரன் பத்தாம் வகுப்பு கூட தேர்வு ஆகாமல் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து ஏமாற்றி தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளதாக, குண்டலிப்பட்டியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.

இந்த புகார் மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், ராஜேந்திரன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் என்பதையும், எந்த ஒரு பள்ளியிலும் கல்லூரியிலும் மேல்நிலை கல்வியையோ, ஆசிரியர் பயிற்சியோ படிக்கவில்லை என்பதையும் கண்டறிந்தனர். மாறாக ராஜேந்திரன், அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் மூலமாக போலி பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு சான்றிதழ் பெற்றதாக தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதை கல்வி அலுவலர்கள்,  20 ஆண்டுகள் கழித்து தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் போலி ஆவணங்கள் கொடுத்து அரசு நிர்வாகத்தை ஏமாற்றி வரும் ராஜேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைக்கப்பட்டது. ஆசிரியர் ராஜேந்திரனை போலீஸார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Govt teacher didnt even pass SSLC, officers found after 20 yrs | Tamil Nadu News.