"OPERATION பண்ணி ஆணா மாறிட்டேன், என் ஆயுட்காலமும் 40 வருஷம் தான்.." காதலுக்காக பெண் எடுத்த முடிவு.. கடைசியில் காத்திருந்த சோகம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தான் காதலித்து வந்த பெண்ணிற்காக, ஆணாக பெண் ஒருவர் மாறிய நிலையில் அதன் பின்னர் நடந்த சம்பவம், கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "நண்பரின் மனைவியுடன் ரகசிய உறவா??.." சர்ச்சையை உண்டு பண்ணிய செய்தி.. எலான் மஸ்க் சொன்னது என்ன?
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை அடுத்த பழைய வத்தலகுண்டு என்னும் இடத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகள் சவுமியா.
இவருக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகள் நந்தினி தேவி என்பவருக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல சவுமியா மற்றும் நந்தினி தேவி ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், இருவரும் இணைந்து வாழவும் முடிவு செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல், சவுமியாவிற்காக ஒரு ஆணாகவும் தன்னை மாற்றிக் கொள்ள நந்தினி தேவி முடிவு செய்துள்ளார்.
தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தன்னை ஆணாக மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சை ஒன்றையும் நந்தினி தேவி எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் தனது பெயரையும் நந்தினி தேவி என்பதில் இருந்து, யஷ்வந்த் என்றும் மாற்றி உள்ளார்.
இதனையடுத்து, யஷ்வந்த் என்கிற நந்தினி தேவியும், சவுமியாவும் கோவில் ஒன்றில் வைத்து திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவரும் தனியாக வாடகை வீடு ஒன்றையும் எடுத்து வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி தகவலறிந்த சவுமியாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள், இருவரையும் பிரித்து, சவுமியாவை அழைத்து சென்றுள்ளனர்.
இதனால், தனது மனைவி சவுமியாவை மீட்டுத் தர வேண்டுமென போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார் யஷ்வந்த் என்கிற நந்தினி தேவி. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சவுமியாவுக்கு யஷ்வந்த்துடன் வர விருப்பம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், நிச்சயம் சவுமியா அப்படி சொல்லி இருக்க மாட்டார் என்றும், குடும்பத்தின் வற்புறுத்தலால் அவர் அப்படி சொல்லி இருப்பார் என்றும் யஷ்வந்த் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, தன்னுடைய காதலிக்காக ஆணாக மாற அறுவை சிகிச்சை கொண்ட யஷ்வந்த் என்கிற நந்தினி தேவியின் ஆயுட்காலம், 35 முதல் 40 ஆண்டுகளாக குறைந்துள்ளதாகவும், உயிரை பயணம் வைத்து சேர்ந்து வாழ ஆசைப்பட்டதாகவும் யஷ்வந்த் கூறியுள்ளார். அதே போல, தன்னை நேரில் வந்து சந்தித்தால், நிச்சயம் தன்னுடன் சவுமியா வந்து விடுவார் என யஷ்வந்த் தெரிவித்துள்ளார். தாங்கள் ஒன்றாக வாழ உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
