‘இனி சென்னைக்குள்ள அவசியம் இல்லாம சுத்த முடியாது’!.. காவல்துறை ‘அதிரடி’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 18, 2021 08:46 AM

சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் செல்வதற்கும் இனி இ-பதிவு அவசியம் என காவல்துறை அறிவித்துள்ளது.

E-Reg must for Chennai people moving to another police station limits

தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் நடமாடியதால், இதனை தடுக்க கடந்த 15-ம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. இதனால் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திறந்திருந்த கடைகளுக்கான நேரம், காலை 10 மணி வரை மட்டுமே கடைகளை திறந்திருக்கும் என குறைக்கப்பட்டது.

E-Reg must for Chennai people moving to another police station limits

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் இ-பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த இ-பதிவு முறை நேற்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது. இ-பதிவு முறையின்படி தனியாக பாஸ் வாங்க வேண்டியது இல்லை. தாங்கள் செல்போனில் இ-பதிவுக்காக பதிவு செய்து இருக்கும் தகவல்களை காட்டினாலே போதுமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

E-Reg must for Chennai people moving to another police station limits

இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அவசர பயணத்துக்காக செல்பவர்கள் கட்டாயம் இ-பதிவு முறையை பின்பற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல் இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால், அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

E-Reg must for Chennai people moving to another police station limits

இந்த நிலையில் சென்னையில் பொதுமக்கள் தங்கள் சரக காவல்நிலைய எல்லைக்கு வெளியே செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுரைப்படி, காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர். அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

E-Reg must for Chennai people moving to another police station limits

அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. E-Reg must for Chennai people moving to another police station limits | Tamil Nadu News.