'எவ்ளோ கம்மியா இருந்துச்சு...' 'இப்போ நாளுக்கு நாள் எகிறிட்டே போகுது...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 18, 2021 08:44 PM

தமிழகத்தில் இன்று (18-03-2021) ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn coronavirus covid19 updates and statistics as on march 18

கொரோனா பாதிப்படைந்த 989 பேரில் 985 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,63,363 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,222 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,40,245 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 569 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,44,568 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 4 பேர், தனியார் மருத்துவமனையில் 5 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,573 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்படைந்த 8,63,363 பேரில் ஆண்கள் 4,31,130 பேர் எனவும், பெண்கள் 2,82,590 பேர் மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 35 ஆக உள்ளனர்.

தற்போது சென்னை உட்பட தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் முன்னேசெரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் முறையாக பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை ஆகும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn coronavirus covid19 updates and statistics as on march 18 | Tamil Nadu News.