BGM Shortfilms 2019

‘யாரையும் கிட்ட நெருங்க விடல’.. ‘உயிரிழந்த எஜமானிக்கு காவலாக நின்ற நாய்’ கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 14, 2019 06:34 PM

கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் அருகே யாரையும் நெருங்கவிடாமல் அவர் வளர்ந்த நாய் நடத்திய பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Dog who fought passion for his owner in Vellore

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராதா. இவரது கணவர் தனசேகர் என்பவர் பலரிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாமல் 6 மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்துவர்கள் ராதாவிடம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த ராதா வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அப்போது ராதா வளர்த்த நாய் ஒன்று அவரின் சடலத்துக்கு அருகே யாரையும வரவிடாமல் சுத்தி சுத்தி வந்துள்ளது. எஜமானியின் இறப்பை தாங்க முடியாமல் நாய் நடத்திய பாசப்போராட்டம் அப்பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தகவலறிந்து போலிசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அப்போதும் யாரையும் நெருங்க விடாமல் ராதாவையே அவர் வளர்த்த நாய் சுற்றி வந்துள்ளது. இதனால் ராதாவின் உறவினர்கள் சங்கிலியால் நாயைக் கட்டி வைத்துள்ளர். இதனை அடுத்து ராதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

Tags : #DOG #WOMAN #VELLORE #SUICIDE