இப்படியும் ஒரு ட்ரிக்கா...! 'சானிட்டரி நாப்கின் மூலம்...' '2 பெண்கள் போட்ட பிளான்...' - அதோட வடிவத்தை மாத்தலன்னா சிக்கிப்போம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Nov 13, 2020 04:33 PM

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ரூ. 62 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சானிட்டரி நாப்கினில் மறைத்து கொண்டு வந்த இரு பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Coimbatore Airport hiding gold Rs 62 lakh sanitary napkins.

வளைகுடா நாடான சார்ஜாவில் இருந்து  கோயம்பத்தூர் வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை கலால் துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான இரண்டு பெண் பயணிகளை சோதனையிட்ட போது, பேஸ்ட் வடிவில் மாற்றி சானிட்டரி நாப்கினில் வைத்து கடத்தி வந்தது தங்கம் என தெரிய வந்தது.

அவர்கள் இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 62 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் சானிட்டரி நாப்கினில் பேஸ்ட் வடிவில் மாற்றி தங்கத்தை கடந்தி வந்த பெண் பயணிகள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதில் சென்னையை சேர்ந்த தெய்வானை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி என்பதும் தற்போது  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : #GOLD #AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Coimbatore Airport hiding gold Rs 62 lakh sanitary napkins. | Tamil Nadu News.