'இரவில் டியூட்டி முடித்து வடபழனி சாலையில் நின்ற பெண்'.. ‘தலைமைக் காவலர்’ செய்த ‘மோசமான’ காரியம்! பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 07, 2020 08:45 PM

சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் பெண் ஒருவர் நேற்றிரவு வடபழனி நூறடிச் சாலையில் பணிமுடிந்து வீடு திரும்பிச் செல்ல எண்ணி, வாகனப் போக்குவரத்துக்காக காத்திருந்துள்ளார்.

Chennai Police man misbehave to Young Staff Nurse on Road in Night

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தலைமைக் காவலர் ராஜூ, அப்பெண்ணை தன்னுடன் வரச்சொல்லி கூறியிருக்கிறார். ஆனால் அப்பெண் வரமறுத்துள்ளதை அடுத்து, அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் அங்கிருந்த பொது மக்கள் அவரை சம்பவ இடத்திலேயே வைத்து தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸார் அந்த காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் காவல் ஆணையர், அந்த காவலரை சஸ்பெண் செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Police man misbehave to Young Staff Nurse on Road in Night | Tamil Nadu News.