'கணவருக்கு செருப்படி!'.. 'கொழுந்தனுடன் விதவிதமான செல்ஃபி!'.. கணவருக்கு அனுப்பி கடுப்பேற்றிய மனைவி! முறைதவறிய உறவால் சென்னையில் விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 03, 2020 02:36 PM

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவவர் பழனி. இவரது மனைவி மரியா. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், பழனியும் அவரது தம்பி செந்தில்குமாரும் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.

chennai elder brother kills own brother due to illicit relationship

சில காலம் முன்பு ஒரு தீ விபத்தில் சிக்கிய பழனிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால், ஆட்டோ ஓட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கியதால் குடும்பத்தில் வருமானம் இல்லாமல் போனது. இதனால் அண்ணன் குடும்பத்தை பார்த்துக்கொள்வதாகக் கூறி தம்பி செந்தில்குமார் உதவ முன்வந்தார். நாளடைவில் பழனியின் தம்பி, செந்தில்குமாருக்கும், பழனியின் மனைவிக்கும் முறைதவறிய உறவு ஏற்பட்டதாகவும்.  பலமுறை தம்பியிடமும் மனைவியிடமும் பழனி இதுகுறித்து பேசிப்பார்த்தும் பலனில்லாததால், தம்பி செந்தில்குமாருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து, பழனி தன் தலைமையில் திருமணம் செய்து வைத்தார்.

ஆனால் பழனியின் கணக்கு தவறிப்போக, மரியாவுக்கும் செந்தில்குமாருக்கும் இருந்த முறை தவறிய உறவு நிற்காமல் நீடித்துள்ளது.  ஒரு கட்டத்தில் செந்தில்குமாரின் மனைவி இதை அறிந்ததை அடுத்து, தற்கொலை செய்து கொண்டார்.  அதன் பின்னரும் அண்ணன் மனைவியுடனான உறவை செந்தில்குமார் தொடர்ந்ததால், பழனி குடும்பத்தில் தகராறு முற்றியது.   இதனால் குழந்தைகளுடன் மரியா, தன் அம்மா வீட்டுக்குப் போனதுமில்லாமல், அங்கு சென்றபின்னும் சும்மா இருக்காமல் கொழுந்தன் செந்தில்குமாரை வீட்டுக்கு அழைத்து, அவருடன் இணைந்து பல புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து பழனிக்கு அனுப்பி கடுப்பேற்றியுள்ளார்.

இப்படியே போய்க்கொண்டிருந்தபோதுதான், மயிலாப்பூருக்கு ஒருநாள் வந்த மரியா, செந்தில்குமாரை வீட்டில் சென்று பார்த்துள்ளார். இதையறிந்த பழனி, மீண்டும் இருவரிடமும் சண்டையிட, ஆத்திரம் அடைந்த மரியா, செந்தில்குமாருக்கு ஆதரவாக பேசியதுடன், கணவர் பழனியை செருப்பால் அடித்து விரட்டியுள்ளார். அவமானம் தாளாத பழனி வீட்டு வெளியே சென்றதுடன் அன்றிரவு தனது தம்பி செந்தில்குமாரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொல்வதற்கு திட்டமிட்டதுடன், அதை அரங்கேற்றவும் செய்தார். இதனால் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார் பழனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai elder brother kills own brother due to illicit relationship | Tamil Nadu News.