தொடர்ந்து 'உயரும்' எண்ணிக்கை... 'அதிகபட்சமாக' பாதிப்பு 1000ஐ 'நெருங்கும்' மண்டலம்... 'சென்னை' கொரோனா நிலவரம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
![Chennai Area Wise Breakup Of Coronavirus Cases May 15 Chennai Area Wise Breakup Of Coronavirus Cases May 15](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/chennai-area-wise-breakup-of-coronavirus-cases-may-15.jpg)
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்முலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து கோடம்பாக்கத்தில் 895 பேருக்கும், திரு.வி.க.நகரில் 699 பேருக்கும், தேனாம்பேட்டையில் 608 பேருக்கும், அண்ணாநகரில் 468 பேருக்கும், வளசரவாக்கத்தில் 461 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 437 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற மண்டலங்களான அடையாறில் 310 பேருக்கும், அம்பத்தூரில் 276 பேருக்கும், திருவொற்றியூரில் 127 பேருக்கும், மாதவரத்தில் 85 பேருக்கும், மணலியில் 75 பேருக்கும், பெருங்குடியில் 72 பேருக்கும், ஆலந்தூரில் 67 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 65 பேருக்கும் இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)