மரணத்திற்கான 'காரணம்' இதுதான்... சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'இறுதி'... பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jun 24, 2020 07:48 PM

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது.

Sushant Singh Rajput\'s Final postmortem report Here

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14-ம் தேதி தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் சுஷாந்த் சிங் மரணத்திற்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் சுஷாந்த் மரணம் தற்கொலை அல்ல அது கொலை என அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் சுஷாந்த் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதனால் 10 நாட்களுக்கு மேல் ஆகியும் சுஷாந்த் மரணம் தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை. அவரது காதலி என கூறப்பட்ட ரியா சக்ரபோர்த்தி உட்பட சுமார் 23 பேரின் வாக்குமூலத்தை போலீசார் இதுவரை பதிவு செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் சுஷாந்தின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கிய நிலையில் மூச்சுத்திணறி தான் இறந்துள்ளார். வேறு எந்த போராட்டமோ, வெளிப்புற அழுத்தமோ அவர் மரணத்தின் போது நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : #ACTOR #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sushant Singh Rajput's Final postmortem report Here | India News.