'இரவில் ஓடிக்கொண்டிருந்த ஏசி'... 'திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்த பயங்கரம்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 08, 2021 07:38 PM

சென்னை கீழ்பாக்கம் பர்னபி சாலையைச் சேர்ந்தவர் முத்து ராஜா. இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் முத்து ராஜா தனது வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஏசி அறையில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏசி பலத்த சத்தத்துடன் ஏசி வெடித்துச் சிதறி எரியத் தொடங்கியுள்ளது.

AC Exploded and caught fire in chennai

இதைச் சற்றும் எதிர்பாராத முத்து ராஜா அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார். இதையடுத்து உடனடியாக கீழ்பாக்கம் தீயணைப்புத்துறைக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஏசியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். மின்கசிவு காரணமாக எரிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரவில் எதிர்பாராத விதமாக ஏசி வெடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #AC #CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. AC Exploded and caught fire in chennai | Tamil Nadu News.