'சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்...' 'உயிருக்கு உயிரா லவ் பணறேன்மா...' 'கர்ப்பம் அடைஞ்ச உடனே...' பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jun 05, 2020 04:21 PM

வேலூரில் 21 வயது இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் சொல்லி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

A 21-year-old man has conceived a 17-year-old girl

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் பெருகி வருவதாக சமூக ஆர்வலர்களும், பெண்களுக்கான அமைப்புகளும் சொல்லி வரும் நேரத்தில், ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் ஒரு பக்கம் நிகழ்ந்து வருகிறது.மேலும் காதலிப்பதாக கூறி சில இளைஞர்கள் சிறுவயது குழந்தைகளை ஏமாற்றி வரும் செய்திகளை காண்கிறோம்.

இதேபோல் பல்லாலகுப்பம் கிராத்தைச் சேர்ந்த 21 வயதான சாந்தகுமார் என்னும் இளைஞர், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்கூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அதன் காரணமாக தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்ததால், இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 17 வயதான குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலும், சிறுமிக்கு 17 வயது தான் ஆகியுள்ளதால், அவரை காதலிப்பதாக கூறிய சாந்தகுமார் மீது போலீசார் போக்ஸோ உள்ளிட்ட உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசார் விசாரணையில் சாந்தகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Tags : #CRIME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A 21-year-old man has conceived a 17-year-old girl | Tamil Nadu News.