ஒரே மாதிரி பிளான்.. ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு வந்த சந்தேகம்.. செக் பண்ணப்போ அதிகாரிகளே ஒருநிமிஷம் ஆடிப்போயிட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Oct 11, 2022 10:55 AM

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வர முயன்ற 3 பயணிகளிடம் இருந்து 3.1 கிலோகிராம் எடையுடைய தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

3 Kg of Gold seized at Chennai international airport

Also Read | ஆரத்தி எடுத்து.. உணவு டெலிவரி ஊழியரை வரவேற்ற வாடிக்கையாளர்.. Applause அள்ளும் காரணம்!!.. வைரல் வீடியோ!!

கடத்தல் 

வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும், கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.

அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த 9 ஆம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணியிடம் சுங்கதுறை அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். அப்போது அவரது உடமைகளில் இருந்து 1,486 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதன்மதிப்பு 65.30 லட்ச ரூபாய் எனத் தெரிவித்திருக்கும் அதிகாரிகள், இது குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். அதன் பலனாக அந்த பயணியின் பெயர் முஹம்மது ஃபஸ்லீன் ஃபலீல் என்பது தெரியவந்திருக்கிறது.

3 Kg of Gold seized at Chennai international airport

விசாரணை

இதனையடுத்து அதே நாளில் துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு பயணி 30.31 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 690 கிராம் தங்கத்தை வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதுகுறித்த விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் பதிலளிக்கவே, சந்தேகம் அடைந்த அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதன் பலனாக அவரும் வயிற்றுக்குள் வைத்து 685 கிராம் எடைகொண்ட தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. இதன் மதிப்பு 30.09 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read | சிக்ஸ் அடிச்சதும்.. மைதானத்தில் இருந்து வெளியே ஓடிய கிரிக்கெட் வீரர்.. பரபரப்பு வீடியோ!!.

Tags : #CHENNAIAIRPORT #AIRPORT #GOLD #SEIZED #CHENNAI INTERNATIONAL AIRPORT #சென்னை #ஏர்போர்ட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 3 Kg of Gold seized at Chennai international airport | Tamil Nadu News.