‘இதுக்கு மேல’... ‘எங்க கையில எதுவும் இல்ல’... ‘எல்லாம் அவர் செயல்’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Nov 02, 2020 02:09 PM

பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறுவது கடவுள் கையில்தான் உள்ளது என்று கே.கே.ஆர். அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

We couldn’t have done anything more, up to Gods now

நேற்றைய சிஎஸ்கே -பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிஎஸ்கே வெற்றி மூலம் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தகர்ந்தது. ஆனால் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது கேகேஆர் அணி. ஆயினும் நெட் ரன்ரேட் குறைவாக உள்ளதால் அந்த அணியின் பிளே-ஆஃப் கனவு நனவாகுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘தங்களது கடமையை சரியாக செய்துள்ளதாகவும், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடவுள் கையில் தான் உள்ளதாக’ கேகேஆர் அணியின் கேப்டன் மார்கன் கூறியுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையிலான போட்டியை சார்ந்தே கேகேஆர் அணியின் பிளே-ஆஃப் தகுதி இருக்கும். இதேபோல மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றாலும், கேகேஆர் பிளே-ஆஃப்பிற்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

Tags : #KKR #RR #IPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. We couldn’t have done anything more, up to Gods now | Sports News.