'திரும்பவும் நீ எங்கள தொட்ருக்க கூடாது!'.. 'இப்பதானே காளியோட ஆட்டம் ஆரம்பமாகி இருக்கு!'.. 'எடுறா வண்டிய'.. ‘ரஜினி’ ஸ்டைலில் CSK வீரரின் ‘தெறி’ ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Sep 20, 2020 10:08 AM

ஐபிஎல் தொடரின் 13வது சீசனின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐ.பி.எல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை அபுதாபியில் எதிர்கொண்டது.

IPL: Imran Tahir viral Tamil tweet over CSK winning

இதில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  அம்பத்தி ராயூடு 48 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்களும், ஆட்டத்தின் இறுதி வரை விக்கெட்டை இழக்காத டூபிளசிஸ் 44 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர்.  இறுதியில் 19.2 ஓவரில், இலக்கை கடந்த சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி இந்த சீசனின் முதல் அசத்தல் வெற்றியை பதித்தது.

இந்தநிலையில், சென்னை அணியின் இந்த அபாரமான வெற்றி பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இம்ரான் தாஹிர், “திரும்பவும் நீ எங்களை தொட்டிருக்க கூடாது. தொட்டுட்ட... தொட்டவன நாங்க விட்டதே இல்ல. இப்பதான் இந்த காளியோட ஆட்டமே ஆரம்பாகி இருக்கு. இன்னும் சிறப்பான தரமான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு. எடுடா வண்டிய போடுடா விசல” என ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் பட டயலாக்கை

தங்லீஷில் பதிவிட்டுள்ளார். இம்ரான் தாஹிரின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL: Imran Tahir viral Tamil tweet over CSK winning | Sports News.