‘என்னால அத நினைச்சுக்கூட பாக்க முடியல’.. போட்டி ஆரம்பிக்கும் முன் ‘சின்ன தல’ போட்ட ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 19, 2020 08:55 PM

ஐபிஎல் 13-வது சீசன் கிரிக்கெட் தொடர் இன்று அபுதாபியில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

Suresh Raina heartfelt wishes to CSK ahead of their IPL2020 opener

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இன்று (19.09.2020) நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனியுடன், ரெய்னாவும் ஓய்வு அறிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரில் இருவரது ஆட்டத்தையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்தநிலையில் சிஎஸ்கே அணி வீரர் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் அங்கு இல்லாமல் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனாலும் என்னுடைய வாழ்த்துக்கள் அனைத்தும் உங்களிடமே இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suresh Raina heartfelt wishes to CSK ahead of their IPL2020 opener | Sports News.