ET Others

ஒன்னு கூடி முஸ்தபா பாடிய ஸ்ரீ சாந்த் - ஹர்பஜன் சிங்! நெகிழ்ந்து போன கிரிக்கெட் ரசிகர்கள்... பின்னணி தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Mar 10, 2022 08:09 PM

இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், கடந்த ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.

Cricketer Harbhajan Singh Wishes Indian Pacer Sree SreeSanth

ஸ்ரீசாந்த் தனது ட்விட்டரில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது தனக்கு கிடைத்த கவுரவம் என்று கூறினார். ஓய்வு பெறுவது தனக்கு கடினமானதாக இருந்தாலும், ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று அவர் கூறினார்.

“எனது குடும்பம், எனது அணியினர் மற்றும் இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. மேலும் விளையாட்டை விரும்பும் அனைவருக்கும். மிகுந்த சோகத்துடன் ஆனால் வருத்தமின்றி, கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன்: இந்திய உள்நாட்டு (முதல் வகுப்பு மற்றும் அனைத்து வடிவங்கள்) கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

"எனது 25 வருட வாழ்க்கையில், போட்டி, ஆர்வம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்துடன் கிரிக்கெட் கேம்களை வென்றேன். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக... எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க நான் முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு என்னுடையது மட்டுமே, இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய நடவடிக்கை. கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொரு கணத்தையும் நான் நேசித்தேன்." என ஸ்ரீ சாந்த் கூறினார்

Cricketer Harbhajan Singh Wishes Indian Pacer Sree SreeSanth

இந்திய வேகப்பந்து வீச்சாளர் எஸ் ஸ்ரீசாந்த் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு அவருக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்தினார். ஸ்ரீ சாந்தும், ஹர்பஜனும் எம்எஸ் தோனியின் தலைமையில் இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தனர். (ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2007 மற்றும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2011).

Cricketer Harbhajan Singh Wishes Indian Pacer Sree SreeSanth

இரண்டு வீரர்களும் ஐபிஎல் 2008 இல் ஸ்லாப்கேட் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஹர்பஜன் சிங், போட்டியின் பின்னர் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை க்ண்ணத்தில் அறைந்தார், இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பின்னர், இந்த சம்பவத்திற்காக ஹர்பஜனுக்கு 11 ஆட்டங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

 

Tags : #CRICKET #BCCI #MUMBAI-INDIANS #INDIAN CRICKET TEAM #HARBHAJAN SINGH #SREE SREESANTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cricketer Harbhajan Singh Wishes Indian Pacer Sree SreeSanth | Sports News.