திருமண தேதி என்ன?.. திருதிருன்னு முழிச்ச கணவன்.. கோபத்துல மனைவி செஞ்ச பகீர் காரியம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 22, 2023 10:42 AM

மும்பையில் திருமண தேதியை மறந்த கணவரை தனது குடும்பத்தினுடன் சேர்ந்து தாக்கியதாக மனைவியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Wife her parents bash up man for forgetting wedding anniversary

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | நடுக்காட்டுக்குள்ள மறைக்கப்பட்ட புதையல்.. தாத்தா கொடுத்த சீக்ரட் Map.. 80 வருஷத்துக்கு அப்புறம் பேரனுக்கு அடிச்ச ஜாக்பாட்..!

மும்பையின் காட்கோபர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஒருவர் தனது கணவரை பெற்றோருடன் சேர்ந்து தாக்கியதாக அந்தப் பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து விசாரணையில் இறங்கினர். அப்போது திருமண தேதியை மறந்ததால் கணவர் மீது மனைவி தாக்குதல் நடத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. கட்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான விஷால் நங்கரே. இவர் அருகில் உள்ள கொரியர் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருக்கும் கல்பனா என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது.

Wife her parents bash up man for forgetting wedding anniversary

Images are subject to © copyright to their respective owners.

கல்பனா அருகில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இருவரும் கோவந்தி பகுதியில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 18 ஆம் தேதி விஷால் வீடு திரும்பி உள்ளார். அப்போது இன்றைய தினம் இருவருக்கும் கல்யாண நாள் எனவும் அதைக் கூட மறந்து விட்டீர்கள் எனவும் கல்பனா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட சண்டை பெரிதாகவே கல்பனா தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து சொல்லி இருக்கிறார். இதனால் அங்கு வந்த கல்பனாவின் குடும்பத்தினர் விஷாலை தாக்கியதாகவும் அவருடைய வாகனத்தையும் சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.

Wife her parents bash up man for forgetting wedding anniversary

Images are subject to © copyright to their respective owners.

மேலும், கல்பனா தனது அம்மாவை தாக்கியதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட அம்மாவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் விஷால் போலீஸாரிடத்தில் தெரிவித்து, அதற்குரிய ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், விஷாலின் மனைவி, சகோதரர் மற்றும் அவரது பெற்றோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 327, 504 மற்றும் 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமண தேதியை மறந்த கணவரை தனது பெற்றோருடன் சேர்ந்து மனைவி தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "ஆர்டர் செஞ்ச ஐ போன் வாங்க காசில்ல".. டெலிவரி செய்ய வந்த ஊழியருக்கு இளைஞரால் நேர்ந்த கொடூரம்.. கதிகலங்கிய கர்நாடகா!!

Tags : #MUMBAI #WIFE #PARENTS #WEDDING ANNIVERSARY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wife her parents bash up man for forgetting wedding anniversary | India News.