"சுஷாந்த் தன்னோட போதைக்காக செஞ்சது இதுதான்!"... "அவர் இப்ப உயிரோட இருந்திருந்தா".. அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கிய ரியா!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 23, 2020 05:31 PM

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்  மரண வழக்கு தொடர்பான விசாரணையின்போது, போதைப்பொருள் வழக்கில் ரியா சக்ரபோர்த்தி செப்டம்பர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Sushant Took Advantage Of Close people For Drugs Rhea Chakraborty

இதனிடையே ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தால் நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில் பேசியுள்ள, ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் தனது போதை பழக்கத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக தனக்கு நெருக்கமானவர்களையும் ஊழியர்களையும் பயன்படுத்திக் கொண்டதாக ரியா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சுஷாந்த் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் இதற்காக குற்றம் சாட்டப்பட்டு ஜாமின் இல்லாமல் ஒரு வருட காலம் சிறை தண்டனையை அனுபவித்திருக்கக் கூடும் என்றும், இது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றும் ரியா குறிப்பிட்டுள்ளார்.

Sushant Took Advantage Of Close people For Drugs Rhea Chakraborty

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறைவான குற்றங்களின் எல்லைக்குள்தான் வரும் என கூறிய ரியா,  ஆகவே, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மட்டுமே போதைப்பொருள் நுகர்வோர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களை பயன்படுத்தி, அவர் தனது போதை பழக்கத்தை எளிதாக்கும் பழக்கத்தில் இருந்தார் என்பது புலனாய்வு அமைப்புகள் சேகரித்த ஆதாரங்கள் மூலம் தெளிவாவதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sushant Took Advantage Of Close people For Drugs Rhea Chakraborty | India News.