Naane Varuven M Logo Top

நைட்ல காதலியை பார்க்கப்போன இளைஞர்.. மறைஞ்சு நின்ன இளம்பெண்ணின் அம்மா.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Sep 20, 2022 07:56 PM

புனேவில் தனது மகளின் காதலனை தாக்கிய தாய் மற்றும் இளம் பெண்ணின் சகோதரர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இது அந்த வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Mother sons nabbed for throwing chilli powder daughter lover

Also Read | இறப்புக்கு முன்னாடி இங்கிலாந்து ராணி எழுதிய கடிதம்.. அதுவும் 5 வயசு சிறுவனுக்கு.. பிரிச்சு பாத்துட்டு ஒருநிமிஷம் எல்லாரும் கலங்கி போய்ட்டாங்க..!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை அடுத்த சின்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் விஷால் கஸ்பே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்களது காதல் விஷயம் இளம் பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்துவந்ததாக தெரிகிறது.

சந்திப்பு

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி விஷால் கஸ்பே இரவு 8 மணிக்கு தன்னுடைய காதலியை சந்திக்க சென்றிருக்கிறார். இதனை அறிந்த இளம் பெண்ணின் தாய் அந்த இடத்தில் மறைந்து நின்று காத்திருந்திருக்கிறார். அவருடைய 2 மகன்களும் அப்போது உடன் இருந்திருக்கின்றனர். காதலியை சந்திக்க வரச் சொன்ன இடத்திற்கு அவர் வராததால் சந்தேகமடைந்த விஷால் அங்கேயே காத்திருந்திருக்கிறார். அப்போது இளம்பெண்ணின் தாய் அங்கு சென்று இளைஞருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் கோபமடைந்த அந்த பெண்மணி விஷாலின் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசியுள்ளார்.

Mother sons nabbed for throwing chilli powder daughter lover

உடனே இளம்பெண்ணின் இரு சகோதரர்களும் விஷாலை தாக்கத் துவங்கியுள்ளனர். இதனால் விஷால் அலறவே, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் விலக்கியுள்ளனர். தாக்கப்பட்டதால் விஷால் காயமடைந்ததை அறிந்த பொதுமக்கள் ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதன்மூலம் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கைது

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விஷால் மீது மிளகாய் பொடியை வீசிய இளம்பெண்ணின் தாய் மற்றும் அவரது இரு மகன்கள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து அந்த பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "நான் செத்துட்டா உடலை அவங்ககிட்ட கொடுக்கக்கூடாது".. மனைவி மற்றும் மகள் மீது வழக்கு தொடுத்த அப்பா.. திகைக்க வைக்கும் காரணம்..!

Tags : #MOTHER #SONS #CHILLI POWDER #DAUGHTER LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mother sons nabbed for throwing chilli powder daughter lover | India News.