Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top

ராகுலை பாத்ததும்.. திடீர்ன்னு சிறுமி செஞ்ச விஷயம்.. கூட்டத்துக்கு மத்தியில் நடந்த சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Sep 29, 2022 12:06 PM

ஒற்றுமை யாத்திரை பயணமாக, காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் உறுப்பினரும் எம்.பியுமான ராகுல் காந்தி, நாடு முழுவதும் 3500 கி.மீ ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 7 ஆம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.

kerala girl cannot able to control her tears meeting rahul gandhi

Also Read | ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்.. பார்க்கிங் லைன்-அ விட்டு 3 இஞ்ச் தள்ளி நின்ன கார்.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் அதிர்ந்துபோன உரிமையாளர்..!

இதனைத் தொடர்ந்து, கடந்த 10 ஆம் தேதி கேரள மாநிலம் சென்ற ராகுல் காந்தி, தொடர்ந்து அம்மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வந்தார்.

மேலும் கடந்த 18 நாட்களாக தொடர்ந்து கேரளாவில் யாத்திரை மேற்கொண்டு வந்த ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

முன்னதாக, ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த ஒற்றுமை யாத்திரை பயணத்தில் அவ்வப்போது ஏராளமான சுவாரஸ்ய விஷயங்கள் அரங்கேறி இருந்தது. அதே போல, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் அமோக வரவேற்பை அளித்திருந்தனர். மேலும், இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கூட பெரிய அளவில் நெட்டிசன்கள் கவனத்தை பெற்றிருந்தது.

kerala girl cannot able to control her tears meeting rahul gandhi

ராகுலுடன் ஏராளமான இளைஞர்கள் கூட இந்த ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியுடன் நடைப் பயணத்தில் பங்கேற்ற சிறுமி ஒருவர், உற்சாக மிகுதியின் காரணமாக ஆனந்த கண்ணீர் வடித்ததும், அதன் பின்னர் ராகுல் காந்தி செய்த விஷயமும் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

வயநாட்டில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்ட போது மற்ற இடங்கள் போல அங்கேயும் சிறப்பான மக்கள் வரவேற்பு அவருக்கு கிடைத்திருந்தது. அப்போது கூட்டத்தில், ராகுலை பார்க்க சிறுமி ஒருவர் வேகமாக ஓடி வந்துள்ளார். அப்போது உற்சாக மிகுதியில் இருந்த அந்த சிறுமி, ராகுலை பார்த்ததும் அவரது கையை பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார். தொடர்ந்து, அவர் ஆனந்த கண்ணீர் வடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

kerala girl cannot able to control her tears meeting rahul gandhi

இதனை பார்த்த ராகுல் காந்தி, சிறுமி தோள் மீது கைபோட்டு அவரை தேற்றி ஆறுதல் கூறவும் செய்தார். இது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. விரைவில் கேரள மாநிலத்தில் பயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி, அடுத்து வேறு மாநிலம் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | இன்ஸ்டாவில் இளைஞர்களை Follow செய்த காதலி.. கோபத்துல இளைஞர் எடுத்த முடிவு.. நவராத்திரி திருவிழாவில் நடந்த திக்.திக்..சம்பவம்..!

Tags : #KERALA #GIRL #RAHUL GANDHI #MEET #BHARAT JODO YATRA #BHARAT JODO YATRA IN KERALA #CONGRESS MP RAHUL GANDHI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala girl cannot able to control her tears meeting rahul gandhi | India News.