அவ்ளோ பெரிய 'FLIGHT'ல ஒத்த ஆளா பயணித்த நபர்...! 'அதுவும் இவ்ளோ கம்மி ரேட்ல...' - என்ன காரணம்...?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 26, 2021 01:39 PM

ஒரே ஒரு பயணியை வைத்து போயிங் விமானம் பயணித்த சம்பவம் நடந்துள்ளது

Boeing plane was carrying only one passenger mumbai to dubai

ஒரு சிலருக்கு விமானத்தில் தனியாக செல்ல வேண்டும் திரையரங்கில் தனியாக பாடம் பார்க்க வேண்டும் போன்ற பல ஆசைகள் இருந்தாலும் இதற்கு பண செலவு அதிகம். அதேபோல் இந்த மாதிரி நடப்பதும் அவர்கள் வாழ்வில் அரிது.

ஆனால் மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் வெறும் 18,000 ரூபாய் தன் விமான டிக்கெட் மூலம் தனியாளாக பயணித்துள்ளார்.

கடந்த மே 19-ஆம் தேதி மும்பையிலிருந்து துபைக்கு போயிங்777 ரக விமானம் செல்லவிருந்தது. அதில மும்பையைச் சேர்ந்த 40 வயது பாவேஷ் ஜாவேரி, 360 இருக்கைகள் கொண்ட போயிங் விமானத்தில் தன்னந்தனியாக பயணித்துள்ளார்

இதுகுறித்து கூறிய விமான சேவை மையம், மிகவும் பரபரப்பான இரண்டு விமான நிலையங்களை இணைக்கும் இந்த போயிங்777 ரக விமானம், துபையிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்காக மறுமார்க்கத்தில் இந்த விமானம் இயக்கப்பட வேண்டும்.

தற்போது பயணம் செய்த எங்களின் பயணி இல்லையென்றாலும் நாங்கள் விமானத்தை இயக்க வேண்டியிருந்திருக்கும் என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Boeing plane was carrying only one passenger mumbai to dubai | India News.