"ஒரு பொண்ணுக்கு 3 முறை கல்யாணமா.?".. இந்த கிராமத்தில் தொடரும் வியக்க வைக்கும் கலாச்சாரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | May 16, 2022 12:20 PM

ஆந்திர மாநிலத்தில் வசித்துவரும் ஒரு பழங்குடியின மக்கள், பெண்களுக்கு 3 முறை திருமணம் செய்துவைக்கும் வழக்கத்தை பல்லாண்டுகளாக தொடர்ந்து வருகின்றனர்.

Andhra Tribal Peoples conduct 3 marriages for women

Also Read |ஒரே வீடியோ காலில் 900 பேரை வேலையைவிட்டு தூக்கிய CEO வின் அடுத்த பிளான்.. அடுத்தடுத்து குவிந்த ஊழியர்களின் ராஜினாமா கடிதங்கள்..என்ன ஆச்சு?

திருமணம்

ஆந்திரா - ஒடிசா எல்லையில் அதிககளவில் வசித்துவருகிறார்கள் மாலிஸ் பழங்குடியை சேர்ந்த மக்கள். இவர்கள் வினோதமான கலாச்சாரத்தை காலங்காலமாக பின்பற்றிவருகின்றனர். இங்கே உள்ள பெண்களுக்கு மூன்று முறை திருமணம் செய்து வைக்கிறார்கள் இந்த மக்கள். 5 வயதினை அடைவதற்கு முன்பும், பெண்கள் பூப்படையும்போதும் பின்னர் திருமணத்திற்கு உரிய வயதை எட்டும்போதும் என பெண்களுக்கு மூன்று முறை திருமணம் நடைபெறுகிறது.

Andhra Tribal Peoples conduct 3 marriages for women

மாப்பிள்ளை இல்லாமல் திருமணம்

இந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது பெண் குழந்தைகளுக்கு 5 வயதிற்குள்ளாகவே முதல் திருமணத்தை நடத்துகிறார்கள். இதில் மணமகன் என யாரும் இருக்கமாட்டார். கிராம மக்களே திருமணத்தில் நடைபெறுவது போன்ற சடங்குகளை செய்து இந்த திருவிழாவை வெகுவிமர்சியாக கொண்டாடுகின்றனர். அதேபோல, பெண்கள் பூப்படைந்த பிறகும் இதுபோலவே திருமண வைபவம் நடைபெறுகிறது.

இறுதியாக, பெண்கள் திருமணத்திற்கு உரிய வயதினை எட்டும்போது வழக்கம்போல, ஒரு இளைஞரை பார்த்து திருமணம் செய்துகொடுக்கிறார்கள் இம்மக்கள். பெண்கள் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளனர் இந்த மக்கள்.

என்ன காரணம்?

இந்த பழங்குடி மக்கள் பெண் குழந்தைகளை கொண்டாடுவதையே தங்களது பண்பாடாக கருதுகின்றனர். பெண் குழந்தைகள் பிறந்தால் பெரிதும் மகிழும் இந்த மக்கள், ஊர் கூடி தங்களது பெண் குழந்தைகளுக்கு இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த ஆர்வம் காட்டுகின்றனர். வசதி குறைவாக இருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு மொத்த ஊரே சேர்ந்து நின்று செலவழித்து திருமணம் செய்வது இவர்களுடையே பிணைப்பின் சாட்சியாக அறியப்படுகிறது.

Andhra Tribal Peoples conduct 3 marriages for women

குழந்தை திருமணங்களை ஏற்காத இந்த கிராம மக்கள், தங்களது பல்லாண்டு கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த திருமணங்களை நடத்திவந்தாலும், பெண்கள் திருமணத்திற்கான வயதை எட்டிய பிறகே முறைப்படி திருமணம் செய்துகொடுக்கின்றனர்.

காதலுக்கு பச்சைக்கொடி

பெண்களையும் அவர்களது முடிவுகளையும் மதிக்கும் வழக்கம்கொண்ட இந்த மக்கள் திருமண வயதை எட்டிய பெண்ணிற்கு வரன் பார்ப்பதற்க்கு முன்பு, அவர் காதலிக்கிறாரா? என்பதையும் கேட்டு அறிந்துகொள்கின்றனர். ஒருவேளை அந்தப் பெண் யாரையாவது விரும்பினால் அவரையே திருமணமும் செய்து வைக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் ஊரே அந்தப் பெண்ணிற்கு உரிய மாப்பிள்ளையை கண்டறிந்து திருமணம் நடத்துகிறது.

Andhra Tribal Peoples conduct 3 marriages for women

தங்களது முன்னோர் காட்டிய வழியில் பயணிப்பதாக கூறும் இந்த மக்கள், பெண் குழந்தைகளை கொண்டாடும் நோக்கில் ஊர்கூடி திருமணம் நடத்திவரும் நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Tags : #ANDHRA PRADESH #TRIBAL PEOPLES #MARRIAGES #WOMEN #திருமணம் #ஆந்திரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Andhra Tribal Peoples conduct 3 marriages for women | India News.