legend updated

‘பிறந்தநாள் கொண்டாடிவிட்டு’ திரும்பிய பெண்ணை.. ‘கடத்திச் சென்ற கும்பல் செய்த..’ நடுங்க வைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 03, 2019 09:04 PM

மும்பையில் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 year old girl gang raped in Mumbai on Her Birthday

மஹாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தோழியைப் பார்க்க மும்பை சென்றுள்ளார். அன்று தன்னுடைய பிறந்த நாள் என்பதால் தோழியுடன் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு அவர் அவுரங்காபாத் திரும்பியுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

பின்னர் வீடு திரும்பிய அந்தப் பெண் இதுபற்றி யாரிடமும் எதுவும் சொல்லாமல் அடிக்கடி அழுதபடி இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணும் பெற்றோரிடம் நடந்ததைக் கூற, அவர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண்ணிற்கு நாக்கு உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஒரு கால் செயலிழந்து வருவதாகவும் உடல்நிலை இப்படியே சென்றால் அந்தப் பெண் கோமா நிலைக்குக் கூட போக வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அடையாளம் தெரியாத அந்த 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #MUMBAI #19YEAROLD #GIRL #GANGRAPE #BIRTHDAY