'வேலிடிட்டி முடிய போகுதேன்னு ஃபீல் பண்ணவங்களுக்கு ஹேப்பி நியூஸ்...' - ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள 'செம' ஆஃபர்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | May 14, 2021 09:08 PM

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

jio is offering various offers customers as the Corona

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும் படியும், பாதி ஊழியமும் கொடுக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நிறுவனங்களில் பலரை வேலையை விட்டும் எடுத்து வருகின்றனர்.

இதன்காரணமாக மக்கள் பண நெருக்கடியில் இருப்பதால் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதென்னவென்றால், பணம் இல்லாமல் ரீச்சார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காலம் முழுவதும் மாதம் 300 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அதோடு, ஜியோபோன்களுக்கு 75 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தாலும், கூடுதலாக 75 ரூபாய்க்கான பயன்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் எனவும் ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதில், வருடாந்தர திட்டங்களுக்கு (Annual plans) ரீச்சார்ஜ் செய்தவர்களுக்கு கொரோனா கால சலுகைகள் பொருந்தாது எனவும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jio is offering various offers customers as the Corona | Business News.