ரயில் நிலையத்தில் நகை மற்றும் பணத்தை இழந்தேன்! பிரபல வி.ஜே இன்ஸ்டாகிராம் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வி.ஜே திவ்யாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது, சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் பாடகியாக நன்கு அறியப்பட்டவர் . ஸ்டார் விஜய்யில் ஓரிரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்யா, தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ‘என் ஜன்னல் வந்த காற்றே’, மற்றும் வில்லு படத்தில்  ‘தீம்தனக்கா தில்லானா ’போன்ற சில ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

vj dhivya shares theft incident at paris when she lost her jewels

அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியான சில பதிவுகளை வெளியிட்டார், அதில் அவரும், அவரது கணவர் ஷிபு தக்கரன் இருவரும் பாரீஸில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு பயங்கரமான சம்பவம் குறித்து விளக்கினார். அந்த திருட்டில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களையும் இத்தம்பதியர் இழந்தனர்.

அங்கிருந்த காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது அவர்கள் எங்களுடைய புகாரை கண்டு கொள்ளவே இல்லை. நாங்கள் உடனடியாக சி.சி.டி.வி காட்சிகளை பார்த்து திருடர்களைப் பிடிக்கச் சொன்னபோது, நக்கலாக சிரித்தார்களே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தன்னையும் கணவனையும் ‘தீண்டத்தகாதவர்கள்’, ‘பேச்சற்றவர்கள்’ போலவும் நடத்தினார்கள் என்றார்.

இந்த திகிலூட்டும் சம்பவங்கள் அனைத்தும் நடந்தும், தனது கணவர் தனது பொறுமையை இழக்கவில்லை என்றும், எப்போதும் போல அமைதியாக இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

vj dhivya shares theft incident at paris when she lost her jewels

People looking for online information on Divya, Star vijay, Villu will find this news story useful.