துணை நடிகையை ஏமாற்றிய நடிகர் பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பிரச்சனையால் உலகமே கதிகலங்கிக் கிடக்க, அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் நார்மல் இயக்கங்கள் எல்லாம் தடைபட்டு கிடக்க, மக்கள் எப்போது நிலைமை சுமுகமாகும் என்று காத்திருக்கின்றனர்.

tharisu nilam actor thiagarajan arrested for cheating woman

இந்நிலையில் சில கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செய்திகளை கடக்கும் போது மக்கள் வெறுப்படைகிறார்கள். சமீபத்தில் அத்தகைய ஒரு தகவல் வெளியாகி கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது. சென்னையிலுள்ள ஆர் ஏ புரத்தை சேர்ந்த தியாகராஜன் என்ற நடிகர், நாடோடிகள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு துணை நடிகையை காதலித்து வந்தார். தியாகராஜன் தரிசு நிலம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த ஜோடி அடிக்கடி சந்தித்து பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். ஒன்பது வருடக் காதலை திருமணத்தில் முடிக்க ஆசைப்பட்ட நடிகை தியாகராஜனிடம் அது குறித்து பேசி வந்தார். ஆனால் நடிகையுடன் நெருக்கமாக பழகி அவரது நகை பணத்தை செலவு செய்த அவர், திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

நிரந்தர வேலை வேறு கிடைத்தவிடவே, நடிகையுடனான தொடர்பை அறவே துண்டித்தார். அதற்குக் காரணமாக நடிகை அவரைவிட ஒரு வயது மூத்தவர் என்று கூறி தன்னை தொந்திரவுபடுத்தினால் கொன்றுவிடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த நடிகை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தியாகராஜன் தன்னை நிராகரித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து வருவதைக் குறித்து புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து தியாகராஜனை கைது செய்த போலீஸார் அவரைப் புழல் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது மோசடி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

tharisu nilam actor thiagarajan arrested for cheating woman

People looking for online information on Coronavirus, Covid 19, Lockdown, Thiagarajan will find this news story useful.