என்னது சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தமா? ரசிகர்கள் வருத்தம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பிரச்சனையால் ஏற்பட்ட லாக்டவுன் காரணமாக சின்னத்திரை தொடர்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் சின்னத்திரை தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானர்கள்.

Television serials shooting stopped again due to lockdown extn

இந்நிலையில் சில நிபந்தனைகள் மற்றும் படப்பிடிப்பு விதிமுறைகளுடன் சின்னத்திரை ஷூட்டிங் நடத்தலாம் என்று அரசு அனுமதி அளித்தது.  தற்போது கொரோனா பிரச்சனை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு அடைப்பு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வரும் ஜூன் 19-ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஷூட்டிங் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சீரியல்கள் வெளியாகாது என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Television serials shooting stopped again due to lockdown extn

People looking for online information on Covid 19, Lockdown, Rk selvamani, Shooting stopped, TV Serials will find this news story useful.