நடிகர் சுஷாந்த் மறைவு... துக்கத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மன அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது தற்கொலை அல்ல கொலை என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் மறைவு மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு After Sushant Singh demise student takes wrong decision

அந்த சோகத்தையே தாங்க முடியாமல் ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது சகோதரரின் மனைவி துக்கம் தாங்காமல் இறந்துவிட்ட அதிர்ச்சி செய்தி இன்று வெளியானது. தற்போது மேலும் ஒரு துக்க செய்தி வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம் பார்லி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்த துக்கம் தாளாமல் சிறுவன் தற்கொலை செய்து இறந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது வீட்டில் இருந்து மரணத்திற்கான குறிப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மிகவும் தவறானவை என்ற புரிதல் குழந்தைகளுக்கு அளிக்க பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

தற்கொலை எதற்கும் சரியான தீர்வு கிடையாது. மன அழுத்தம் எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சுஷாந்த் மறைவு மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு After Sushant Singh demise student takes wrong decision

People looking for online information on Student, Suicide, Sushant Singh will find this news story useful.