‘என்.ஜி.கே’க்கு பிறகு தனது அடுத்த படம் குறித்து தகவல் சொன்ன செல்வராகவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ திரைப்படம் இந்த ஆண்டு மே.31ம் தேதி வெளியானது.

Selvaraghavan starts screenplay writing for his next film

ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்தனர்.

மேலும் பாலா சிங், பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் செய்தனர்.

அனல் பறக்கும் அரசியல் கதைக்களத்தில் உருவான ‘என்.ஜி.கே’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கான கதை எழுதும் பணியை தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லேப்டாப் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து திரைக்கதை எழுதும் பணி தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ‘புதுப்பேட்டை 2’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய திரைப்படங்களை செல்வராகவன் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் கூட்டணி அமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Screenplay writing #joyofwriting #painforpleasure

A post shared by Selvaraghavan (@selvaraghavan) on