www.garudabazaar.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மனம் திறந்த சம்யுக்தா... "ஆரி எதுக்கு அப்படி பண்ணனும்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா. இந்நிலையில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார். 50 நாட்கள் கடந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார்.

samyuktha opens up after biggboss மனம் திறந்த சம்யுக்தா

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அப்போது "ஆரி உங்களைப் பார்த்து   அப்படி கத்தினார் என்று நீங்கள் கோபப்பட்டீர்கள் ஆனால் சனத்திற்கும் இதேதான் நடந்தது ஆனால் நீங்களோ, அல்லது வேறு யாரும் கூட அவருக்கு சாதகமாக பேசவில்லை ஏன்" என்பது போல் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சம்யுக்தா "எனக்கு நடந்ததும் சனத்திற்கு நடந்ததும் ஒன்றல்ல. சனம் தூண்டி விட்டதால் தான் பாலா அப்படி பேசினார். அதற்கென்று பாலா பேசியது சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆரி எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்பதற்காக என்னை பார்த்து கத்தினார். அதுதான் எனக்கு பிடிக்கவில்லை" என்பது போல் அவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மனம் திறந்த சம்யுக்தா... "ஆரி எதுக்கு அப்படி பண்ணனும்" வீடியோ

Tags : Biggboss

தொடர்புடைய இணைப்புகள்

samyuktha opens up after biggboss மனம் திறந்த சம்யுக்தா

People looking for online information on Biggboss will find this news story useful.