www.garudabazaar.com

ஆரி பற்றி சம்யுக்தா வெளியிட்ட முதல் பதிவு... "அவர் அப்படி பண்ணது எனக்கு ரொம்ப..."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா. இந்நிலையில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார். 50 நாட்கள் கடந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார்.

samyuktha first statement about aati in biggboss ஆரி பற்றி சம்யுக்தா

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  முதன் முறையாக பேட்டியளித்த அவர், ஆரி பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறும் பொழுது "ஆரி என்னிடம் பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசி விட்டார். ஒரு பெண்ணை பார்த்து அப்படி கத்தலாமா. கேமரா முன் சென்று என் மீது தவறு இருந்தால் காலில் விழுந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். அது இப்போது தான் தெரியும். ஆனால் அவர் மனதில் அந்த குற்ற உணர்ச்சி இருக்கும் போது ஏன் என்னிடம் வந்து பேசவில்லை. ஆனால் போட்டி முடிந்து வெளியே வந்த பிறகு எனக்கு அவர் மீது எந்த மனவருத்தமும் இல்லை" என்றும் கூறியுள்ளார்.

ஆரி பற்றி சம்யுக்தா வெளியிட்ட முதல் பதிவு... "அவர் அப்படி பண்ணது எனக்கு ரொம்ப..." வீடியோ

Tags : Samyuktha, Aari

தொடர்புடைய இணைப்புகள்

samyuktha first statement about aati in biggboss ஆரி பற்றி சம்யுக்தா

People looking for online information on Aari, Samyuktha will find this news story useful.